காஷ்மோரா...
ரௌத்திரம், இ.ஆ.பாலகுமாரா தந்த கோகுல் இயக்கிய , கற்பனை , காமெடி..கலந்த படம் காஷ்மோரா.
தெய்வகுமாரி , தென்கிழக்கு ஆசியா..செம த்ரில்... சாபத்தில் உறையும் துர் ஆவி கழுகு, புறா என ஆரம்பமே அட என ஆர்வத்தை விளைக்க..
காஷ்மோரா என்றப்பெயருடன் கார்த்தி அறிமுகம் கலக்கல்..தூள்..!
பேயோட்டும்(நவீன) சாமியாக ஹைடெக் புத்திசாலி கார்த்தி..அப்பா சாமியாக விவேக், பாட்டி,தங்கையாக மதுமிதா என இறங்கும் கூட்டம் அதகளம் செய்கின்றனர்..ப்ரேமிற்கு ப்ரேம்..!
ப்ளாக் மேஜிக் கதையில் அண்டர் ப்ளே ஆகும் ப்ளாக் காமெடி அள்ளுகிறது.
செய்வினைகள் ..செயப்பாட்டுவினைகள் என விளக்கும் காட்சிகள் மாஸ் !
கார்த்தி...காஷ்மோ..என வர ஆசிரமம்..எப்படி பிஸினஸ் ஆகிறது என கிழிகிழின்னு கிழிச்சுட்டீங்க..கோகுல் ஜி..சூப்பர் சூப்பர்ஜி!
சரத் லோகேஷ் மினிஸ்ட்ராகவும் ,அவருக்கு கைட் செய்யும் சாமியாராக மதுசூதன் என கொலை ப்ளானிங்.. நம்பிக்கை துரோகத்திற்கு தொங்கவிடுவோம் என ஆரம்பமாகும் காட்சிகள், இதில் கார்த்தி சிக்கி என்ன ஆவாரோ எனும் நினைக்கும் போதே...
கமிஷனரையே காலில் விழவைப்பதும்..வாய் சாதூர்யத்தால் மினிஸ்டரை அசத்துவதுமாக கார்த்தி& விவேக் டைமிங் கமெடியுடன்..வயிறு வலிக்குது பாஸ் !! :D
கார்த்தி ஒவ்வொரு ப்ரேமிலும்..அசத்துகிறார் !
கூலாக பயத்தையும் கெத்தையும் காண்பித்து..காமெடியில் பட்டையைகிளப்புகிறார்.
இண்டர்வெல் க்கு முன்பான காட்சிகள்.ரத்தனமாதேவி மஹாலில் மாட்டிய..கார்த்தியின் ஆசம் பர்பாமென்ஸ்..ஆயிரம் லைக்ஸ் !! தியேட்டரே குலுங்குதே !
அப்பாவி..பேயை பார்க்க துடிக்கும் ஆராய்ச்சி மாணவியாக ஸ்ரீதிவ்யா..அசடென நினைத்தவர்..அறிவாளியாகத்தெரிய.. நீ வந்த சரி..என்னையும் ஏன் பேய் கொண்டு வந்ததுன்னு எனும் போது தனித்து தெரிகிறார்.
செகண்ட் ஹாஃப்ல் நயன்..ரசிகர்கள் விஸிலுடன் வர , ராஜ் நாயக் ஆக கார்த்தி.. 30 நிமிடம்தான் பீரியர் கதை..ஆனாலும் உள்ளே இழுத்து நம்மையும் போடும்..நடிப்பு..காஸ்டியூம்ஸ்..ஸ்டண்ட்ஸ்..ராஜீவன் கலை அமைப்பு என அத்தனையும் அசத்துகின்றன.
நயன்தாரா.. காதலனுடன் தப்பிச்செல்ல முனைய..கண்ணுக்கெதிரே காதலன், தம்பி, அப்பா என அனைவரும் சாக..கண்களில் தீம்பிழம்பு தெறிக்க, அழகு பதுமை அறிவு பதுமையாகவும் வாள் சுழற்றுகிறார்.இன்னமும் வந்துருக்கலாமோ என்றக்குறையை..க்ளைமேக்ஸில் தீர்த்துவைக்கிறார்.
சூப்பர்சூப்பர்ஜி அரண்மனையில் புரோக்கராக..க்ளோஸா வாங்க பாஸ்..ஃபாலோ பண்ணுங்க ஜி..எனும் காமெடி ஜீராவில் கரைந்துப்போகிறோம்.
என்ன காரணம்..சாபத்திலிருந்து எப்படி விடுவிக்கப்படுகிறான்..ராஜ் நாயக் , ரத்தினமா தேவி வென்றாளா ?
ரோகிணியில் பிறந்த குடும்பம் தப்பித்ததா போன்ற கேள்வி முடிச்சுக்களை..அழகாக திரைக்கதையில் அவிழ்த்து..முழு காமெடி , ஆவி கலந்த படமாக கார்த்தியின் ராஜ்ஜியத்தில் படைத்திருக்கும் கோகுலுக்கு சுமிசினிமாஸ்ன் பாராட்டுகள் !
(ரெட்டை வசனங்கள்..டாஸ்மாக், குத்துப்பாட்டு, ஆபாசமின்றி படம் தந்தமைக்கும்!)
சந்தோஷ் நாராயணன் தீம் மியூஸிக் , பேக் கிரவுண்ட் ஸ்கோரில் செம ஸ்கோர். கலந்திருக்கிறது இசை படத்துடன்.
ஓயா..ஓயா.. திக் திக் பாடல்கள் நினைவில் நிற்கின்றன.ஜெகதம்பா...இணைந்து ஓடுகிறது ப்ரேம்களில்..!
காஸ்டியூம் , போஸ்ட் ப்ரடக்ஷனில் CG effects , ஓம் ப்ரகாஷின் கேமரா படிகளில்..வளைவுகளில் வளைந்து அந்தந்த காலத்திற்கு நம்மைக்கொண்டு செல்கின்றன.
(3D face scan என்ற தொழிற் நுட்பமும் , 3D omni directional camera வும் முதன்முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளதாம்!)
முதல் பாதியில் சில காட்சிகள் ரிபீடட் ஆக தோன்றுவதும், தலை மட்டும் தனியாக பேசும் ராஜ் நாயக் ம் கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்துவதை தவிர்த்திருந்தால்..முழுவதும் ஆடியன்ஸ் கவனத்தை ஈர்த்திருப்பான் காஷ்மோரா !
இறுதி வரையிலும் அதே காமெடி பீலை தக்க வைத்து , முழு எண்டெர்டெயின்மெண்ட் படமாக தந்த காஷ்மோரா குழுவிற்கும் ,
கார்த்தியின் இணையில்லா நடிப்பிற்காகவும் பார்க்கலாம் குடும்பத்துடன் தியேட்டரில் !
காஷ்மோரா..காமெடி கிங் :)