நம்முடைய எழுத்துக்கள் அச்சில் பார்ப்பது தனி மகிழ்ச்சியைத்தருவது !
கதைகள் மிக விரும்பிப்படைப்பது..அது வெளியாகும் போது அதுவும் முதன்முதலில் எனும் போது ..தனி சந்தோஷமே !!
பாக்யா இதழில் என் கதை வெளியாகியது முதல் கதை ..இதோ அது ...
கதைகள் மிக விரும்பிப்படைப்பது..அது வெளியாகும் போது அதுவும் முதன்முதலில் எனும் போது ..தனி சந்தோஷமே !!
பாக்யா இதழில் என் கதை வெளியாகியது முதல் கதை ..இதோ அது ...
--------------------+++-----------+++-------------------
யாரோ இவள் .
மாலை நடைப்பயிற்சி முடித்து , வீட்டிற்கு திரும்ப லிப்டில் அவசர அவசரமாக நான் ஏறவும் , உள்ளே சிலர் நிற்பதும் கண்ணில் பட்டது!
அப்பாடா , பிடிச்சிட்டோம் என்றிருந்தது .
அந்த இருபத்தைந்து மாடி அப்பார்ட்மெண்ட் பில்டிங்ல் எப்போதும் , இருக்கும்
ரெண்டு லிப்ட்ம் நிரம்பி வழியும் .
அதிலும் காலை , மாலை வேளைகளில் நம்மையும் ஒருவராக அதனுள்
திணிப்பது ஒரு கலை.
அந்த பெங்களூர் க்ளைமேட்டிலும் வேகமாக வந்து நுழைந்தது வியர்த்துப்போனது.
லிப்ட் தானாகவே , மூடிடும் நேரத்துக்குள் உள் நுழைவதும், ஒரு த்ரில்லுடன் பிடித்தது எனக்கு.
சட்டென்று மூடும் வேளையில் தான் அவள் நுழைந்தாள்.
அட ! என்ன அழகு !
தேவதைப்போல இருக்காளே ! என்று அந்த அவசரத்திலும் கண்கள் அளவெடுக்க , அவள் கையில் ஒரு வயது மதிக்கத்தக்க குழந்தையுடன் நுழைந்தாள்.
குழந்தை அவளுடையதா இருக்குமே என்ற சிந்தனையை தவிர்க்க நினைத்தேன். அவளுடையதுதான் என்று குழந்தையின் முகச்சாயல் கட்டியம் கூறியது.
இதே பில்டிங்லயா இருக்கிறாள் , பார்த்ததே இல்லையே என மனம் தாறுமாறாக யோசித்தது.
"15 வது ப்ளோர் .." என்றாள் என்னைப்பார்த்து ! நான் தான் எந்தமாடிக்கு செல்லவேண்டுமென அழுத்தும் பட்டன் அருகில் நின்றேன் என்பதையும்
ஜில்லென்று குளிர் காற்று வீசியதுப்போல உணர்ந்தேன் .
தலையில் இருந்த மல்லிகைப்பூ , அவளை மேலும் அழகாக்கிக்காட்டி , என் கிராமத்து நியாபகத்தையும் கிளறிப்போட்டது .
மற்றவர்களும் லிப்டில் நிற்க , ஏனோ கண்ணும் மனமும் அவளிடமே சென்றது , அவளும் அதை உணர்ந்தவள் போல கொஞ்சம் நெளிந்தாலும் , சுதாரித்து , "ஹாய் சொல்லும்மா ! " என்றாள் தன் குழந்தையிடம் , காதில் தேன் பாய்ந்தது .
குழந்தையும் ,ஹாய் என்று மழலையில் அவள் கூறியதை மொழிப்பெயர்த்தது.
லிப்ட் ஒவ்வொரு ப்ளோராக நின்று நின்று செல்ல , பயணமாக தொடரக்கூடாதா என்றே ஏங்க ஆரம்பித்தேன் !
அட கடவுளே 15 ம் வந்துடுச்சே ..இறங்கிடுவாளே !!
மனம் தவிக்க , தானாகவே என் கால்களும் அவள் பின்னே பதினைந்தாம் மாடியிலேயே வெளிவந்தேன் ..
" என்ன நீங்க ! இந்த ப்ளோர்லயா இருக்கீங்க ! " என்றாள் என்னைப்பார்த்து .
" ஆமா ..இல்ல , இதோ 1508 தான் எங்க வீடு , வாங்களேன் !" என்றேன் தன்னிச்சையாக.
பூ மலர்வதுப்போல் சிரித்தவள் " ஓ..சாரி , இப்ப கஷ்டம், நா இங்க தான் 1502 ல இருக்கேன் . நானும் வரேன் ! நீங்களும் , வாங்க, வீட்டுக்கு கண்டிப்பா ! " .
கண் சிமிட்டி தலை சாய்த்து சிரித்தாள் , உள்ளுக்குள் ஜிலிர்த்துக்கொண்டிருந்தேன்.
மகிழ்ந்தவளாய் நெகிழ்ந்துப்போய் நான் செய்வதறியாது நிற்க , அவளே தொடர்ந்தாள் , " குட்டிம்மா , பாட்டிக்கு பை சொல்லு !! "
ஆம் , என் பையன் வீட்டுக்கு வந்தவள் , கிராமத்தில் வசித்த போது இழந்த என் பெண்ணின் சாயலில் இவள் இருப்பதை பார்த்து , "அவசியம் வருகிறேன்..பை " என்றப்படியே என் வீட்டின் சுவரில் உய்யாரமாக சாய்ந்திருந்த காலிங் பெல்லை அழுத்தினேன் .
எதோ ஒரு சந்தோஷம் தனித்துள்ளலாய் ஒரு தெம்பை தந்தது.உள் நுழைந்த என் துள்ளலை அதிசயமாகப்பார்த்த மருமகளை பார்த்துப் புன்னகையுடன் கடந்தேன் .
----------------()--------------
No comments:
Post a Comment