Friday 24 June 2016

எல்லாமே அக்கரைக்கு இக்கரைப்பச்சை ..அறிவோமா நாம்..





இன்று ஷாப்பிங்க்காக ,இங்குள்ள ஒரு பெரிய ஹைப்பர் மார்கெட் போயிருந்தேன் , நான்.
சென்றிருந்த நேரம் மதியம் என்பதால் கூட்டம் , குறைவு .
மற்ற பொருட்களை எடுத்துக்கொண்டு,
காய்கறி,பழங்கள் பக்கம் வந்தேன் .
குறிப்பா கீரை செக்‌ஷனில் சல்வாரில் ரெண்டு பெண்கள் , பேசிக்கொண்டே கீரைகளை அலச ஆரம்பித்தனர் கண்களால்,
அட! தமிழ் !! என்று ஆட்டோமேடிக்கா காதுகளைதந்தேன் அவர்களிடம்..
" என்ன அம்மு, கீரை இதெல்லாம் "
"ஆமாடி , கொஞ்சம் கூட ப்ரெஷ்ஷா இல்ல"
" நீ, என்ன ஊர் ஞாபகமா ,அங்கதான் காலைவேளைல ப்ரெஷ்ஷா , ஆசையா இருக்கும், அந்த குயில் சத்தம்,பால்,பேப்பர் சவுண்ட் , கொக்கரக்கோ , பிள்ளையார் கோவிலிருந்து வரும் பாட்டு சத்தம்"
இப்படி எத்தனையோ ..
போடி..எல்லாம் மிஸ் பண்ணிட்டோம்,
நீ கீரையை சொல்ற,
சரி வா கறிவேப்பிலை லைஎடுத்துப்போலாம் " என்றார்..
கேட்டுட்டுருந்த என்மனமும் அதையே அசைப்போட , சென்ற வகேஷனில் சென்ற உறவினர் வீடு ஞாபகம் வந்தது.


நெருங்கிய உறவினர் வீட்டுக்குள் நுழைந்ததுமே ,ப்ளீஸ் வெல்கம் என்றார் அவ்வீட்டின் இல்லத்தரசி ,
அப்போது ஆரம்பித்தது பை..பை வரையிலும்
எங்களுடன் ஆன பேச்சு ஆங்கிலத்திலேயே தொடர்ந்தது ,நாங்கள் பேசினதென்னவோ தமிழில் தான், ஆனா அவங்க பேசினது வெளி நாட்டு பெருமையும் , ஆங்கிலமும் தான்..
உங்களுக்கென்ன நிம்மதியான வாழ்க்கை இப்படியான இடைச்சொருகலுடன் , இறுதியாய்
" இது பையன் CV ,எப்படியாவது ஒரு வேலை ஏற்பாடு பண்ணிடுங்கன்னு" கையில் பேப்பரும் கொடுத்து அனுப்பினார்.
இன்று ஏனோ அது நினைவில் வர..
வேறென்ன...
( இதுவும் ஒரு சக்கரவ்யூகம் ,வந்தால் தெரியும் என எனக்கு நானே சொல்லிக்கொண்டே )


No comments:

Post a Comment