Friday 24 June 2016

மம்மீ ஊட்டாத ரைஸ் ஐ மாம்பழம் ஊட்டும் !


மாஸா ..அல்போன்ஸா இப்படில்லாம் ஆசையில் தான் நானும் மோசம் போனேன் !
மேங்கோ பெஸ்டிவல் என..மாம்பழ தோப்புக்குள் போன உணர்வைத்தந்து..லபக்கென உள்ளிழுக்கும் இங்குள்ள படா மால்கள்.
அத்தனை மாம்பழப்பிரியர்கள் இங்கு..ஆஹா..இமாம்பசந்த் , ஐ.. செந்தூரம் , அட அல்போன்ஸா.., தோத்தாப்புரி..இப்படியெல்லாம் நானும் பாய்ந்துப்பாய்ந்து பொறுக்கினேன் கூடையில்..போட்டேன் எடை மேடையில்..விரித்தேன் ப்ரிட்ஜில் கடையா ?!
சாப்பிட விட்டானா..கடங்கரான்..இப்படியெல்லாம் எனக்கும் பராசக்தி வசனங்களில் பேச ஆசை..ஆனால் வரும் ஆத்திரங்களால் மக்களே (கேப்டன் வாழ்க்கையோட ஒன்றிட்டார் !!  ) அப்படியே சொல்லிடறேன் !
நானும் ஒவ்வொன்றாக அத்தனை டெஸ்ட்ம் அதாங்க தரபரிசோதனை.. மூக்குக்கு அருகில் வைத்தல் , தூரத்தில் வைத்து..தேர்ந்த பாம் ஸ்குவாட் டாக் போலவே தேர்வு செய்தல் ..இதில் அழகு என்னவெனில்..என்னைப்பார்த்து மற்ற நாட்டு காரர்களும் அதேப்போலவே வாங்கினர். சிலருக்கு டிப்ஸ்ம் தந்தேன். ஆனால்..விளைவு நறுக்கும் போது தெரிந்தது !
அத்தனையும் அந்தப்பழங்களா !! 
எந்தப்பழங்கள்..? இங்கேயுமா அப்படி ?!
எந்தக்காயும் குறிப்பாக வாழைமாம்பழம்..புகைமூட்டம் அல்லது அரிசிப்பானை(நம்ம ஸ்டைல்) , வைக்கோல் இப்படி வைக்க..குப்பென..மல்லிகை மலர்ந்தால் போல மறு நாள் பளிச்சென்று மஞ்சள் தேய்ச்சுக்குளிச்சாப்போல பழுத்திடும்.
இது இயற்கையான முறையில் பழுப்பது.
இதற்கு 48 -72 மணி நேரம் அதாவது குத்துமதிப்பா மூன்று நாட்கள் ஆகலாம்.
ஆனால்..நமக்கு தான் அத்தனைக்கும் ஆசைப்படும் அவசரமாச்சே..அதனால்..கார்பைடு கல்லுடன் சேர்த்து பழுக்கவைக்கப்படுவதில்..கை மேல் பலனாக.. 12-24 மணி நேரத்தில் பழம் ரெடியாகிறதாம்.
சரி..எப்படி வித்யாசம் கண்டுபிடிக்கலாம்.என்னைப்போல போஸ்ட் போட்டு நொந்தப்பின் இல்லை..சரீ..சரீ..
மேலே மஞ்சள்..வெளீர் நிறத்தில் இருந்தாலும்..காம்பின் அருகில்.. ஒரு புளிப்புத்தன்மை..வாடை வருமாம்.அதோடு நறுக்கினதும்.. உள்ளே காய்..வெளியே பழம் நான் என சிரித்து நமக்கு எரிச்சலை அள்ளித்தரும்.
இதை சாப்பிடும் குழந்தைகள், பெரியவர்களுக்கு..வயிற்று வலி..எக்ஸ்ட்ரா.. எக்ஸ்ட்ரா வரும்..வரலாம்..ஆனால்..இதை குழந்தைகள் நன்கு பழுந்திருந்தால் தவிர தொடுவதில்லை என்பது இடைச்செருகல்.
ஆனால்..இந்த ஓவர் நைட் கனியாக்கும் வேலை செய்யும் வியாபாரிகள் சொல்வது என்னவெனில்.. " மருத்துவரீதியாக அதெல்லாம் ஒண்ணும் வராது.. ! எல்லாமே வதந்தி " என்கிறார்களாம். அடேங்கப்பா !
எதுவானாலும்..முக்கனியின் ருசிப்போகுதே !
வாங்கியதை..நறுக்கி நறுக்கிப்பார்த்து..இப்போது பச்சடி தவிர ..எருசேரி..மாங்காய்- மாம்பழ வெறிசேரி..இப்படி எதாவது டிஷ் செஞ்சு..வீட்டில் சரிந்த நற்பெயரை திரும்ப தூக்கி நிறுத்தலாமா என்றுப்பார்க்கிறேன்..
ஆமா..இப்பதிவு எதற்கு எனில்..நீங்களும் உஷாரா இருங்கப்பு..என்னம்மாதிரி வேற ரெசிபி தேடும் நிலை வேண்டாமே !!
‪#‎அம்புட்டும்‬ காய் ..!! சோதனை.

No comments:

Post a Comment