Friday 24 June 2016

புதுக்கவிதை என்றால் என்ன...கவிஞர் வாலி :


வாலிபக்கவிஞர் வாலி அவர்கள் திருப்பராய்த்துறை பூர்வீகமாகவும் , ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீனிவாஸ ஐயங்கார்- பொன்னம்மாள் தம்பதிகளுக்கு மகனாகப்பிறந்தவர் ,
அப்போதைய ஓவியர் மாலியைப்போல புகழ்பெறவேண்டும் என்பதால் ரெங்கராஜன் என்ற இவர் பெயரை வாலி என்று மாற்றியவர் அவரது பள்ளித்தோழர்.
ஸ்ரீரங்கத்தில் நண்பர்களுடன் சேர்ந்து, நேதாஜி என்ற கையெழுத்துப்பத்திரிக்கையைத்துவங்க, அதன் முதல் பிரதியைப்பெற்றுக்கொண்டவர் கல்கி ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.
அந்த நிகழ்ச்சிக்கு தலைமைத்தாங்க வந்த திரு.பார்த்தசாரதி அவர்கள் அப்போதைய திருச்சி வானொலி நிலையத்தில் வாலி க்கு கதை , வசனங்களுடன் நாடகம் எழுதும் வாய்ப்பை வழங்கினார்.
அதில் ஒரு நாடகம் , "பேராசைப்பிடித்த பெரியார் "
இந்தத்தலைப்புடன் நிகழ்ச்சிக்கு அழைக்க பெரியாரை சந்திக்கப்போக , பெரியாரும்.."எனக்கு ஆசையே கிடையாதே , பின் எப்படி பேராசை" என்றாராம்.
அதற்கு..வாலி, "தமிழ் நாடு என்ற பெயர் வரவேண்டும் என்ற பேராசைப்பிடித்த பெரியார்" என விளக்க அதன்பின் பெரியார் ஏற்றுக்கொண்டு வர , நாடகத்துக்கு `இவர்தான் பெரியார்!
இவரை எவர்தான் அறியார்? என்ற பாடல் எழுதிட அதைப்பாடியவரும் நடித்தவரையும் கண்டு ரசித்த பெரியார் , பாட்டென்றால் இப்படி இருக்க வேண்டும் ஸ்ரீரங்கத்து ரெங்கராஜன் , இந்த நாத்திக பெரியாருக்கு பாட்டு எழுதியிருக்கிறார் எத்தனை எளிதாகப்புரியும் படி உள்ளது" என்று பாராட்டியுள்ளார்.
பெரியாராலே பாராட்டப்பெற்ற அனுபவம் கொண்ட வாலி அவர்கள் இதை தான் நினைவுக்கூர்ந்து புதுக்கவிதை என்பது எப்படி இருக்கவேண்டுமென இவ்வாறு தெரிவிக்கிறார்..
" கவிதைகளில் பல வகைகள் , மரபுக்கவிதை ,புதுக்கவிதை, ஹைக்கூ என உண்டு.
இதில் சிக்கலான வார்த்தைகளைப்போட்டு வார்த்தை ஜாலம் காண்பித்துப் பலருக்குப் புரியாமல் கவிதை எழுதுவதில் என்ன பயன் !
கவிதையெனில்..அனைவருக்கும் சென்றடையவேண்டும் கருத்துகள் ! எளிமையாக ,
இறுதியில் ஒரு பொருளுடன் முடியவேண்டும்!
புரியும்படி எழுதுங்கள் ! பலருக்கும் சென்றடையட்டும் அதுவே என் வகையில் புதுக்கவிதை" என்கிறார்!
ஸ்ரீரங்கத்தில் இவரது நெருங்கிய நண்பர்கள் குழாமில், பின்னாள் சுஜாதா முன்னாள் ரெங்கராஜனும் , அகிலன் அவர்களும் உண்டு.
கவியரசர் முதன்முதலில் கதை வசனம் எழுதவே வந்தார்..அவரைத்தான் பாட்டெழுத வைத்தனர்.
ஆரூர்தாஸ் கரந்தை தமிழ்சங்கத்தில் தமிழ் பயின்று பாடல்கள் எழுத வந்தவரை..
கதை வசனம் எழுதவைத்து பாசமலர் போன்ற ஹிட் படங்கள் வெளிவந்தன.
அதுப்போலவே நானும்...
என்பவர்
"எழுதப் படிக்கத் தெரியாத எத்தனையோ பேர்களில் எமனும் ஒருவன். ஒரு அழகிய கவிதைப் புத்தகத்தைக் கிழித்துப் போட்டுவிட்டான்"
– கண்ணதாசன் இறந்தபோது வாலி எழுதிய கண்ணீர் வரி இது!
15,000 பாடல்கள் எழுதிய வாலி , எளிமையானப்பாடல்கள் மூலம் கருத்துக்களை முன்வைத்து..நம் மன சிம்மாசனத்தில் என்றும் தனியிடத்தில் அமர்ந்திருக்கிறார்.


No comments:

Post a Comment