Monday 11 April 2016

கலகலக்கும் ..பளபளக்கும் துபாய் தீபாவளீ.....ஈ..ஈ

துபாய் ல எப்படி தீபாவளி கொண்டாடுவாங்கன்னு எழுத சொல்லிருந்தார் ஒருவர் !
சும்மா வே....சலங்கை வேறயா ந்னு உங்க மை.வாய்ஸ் நா கேட்ச் பண்றேன் ! smile emoticon
UAE population ல 30 % போல நம் இந்திய மக்கள் தான்
அதாவது 2.6 மில்லியன் மக்கள் இருக்க , இதில் பல சிந்தி , குஜராத்தி மக்கள் சில தலைமுறைகளாக வந்து குடியேறி , இங்கேயே திருமணம் , இறுதிக்காரியம் செய்யுமளவிற்கு ஒன்றி விட்டனர்.
சரி தீபாவளி க்கு வருவோம் ! தீபாவளி பல வட இந்திய குடும்பங்கள் வாழ்வதால் ஒரு வாரம் முன்பே களைக் கட்ட ஆரம்பிக்கும் !
மராட்டியர் , குஜராத்தியர் , என பலரும் 5 நாட்கள் தீபாவளியாகக் கொண்டாடி இன்று இறுதி நாளாக லஷ்மி பூஜையுடன் முடிப்பார்கள்! இன்று நாங்கள் அவர்கள் வீடுகளுக்கு விஜயம் செய்வதும்..வாடிக்கை.
முதலில் ஆரம்பமே , வீடுகளில் போடப்படும் கலர் கலரான சீரியல் லைட்ஸ் தான் .
வருடாவருடம் புதுப் புது டிசைன்களில் அலங்கரிப்பர் ! இந்த வருடம் இன்னும் ஜொலிக்கிறது இரவில் !
அடுத்தது..இந்தியக் கடைகளில்..கூட்டம் அலைமோத அதிகம் கடைவிரிக்கப்பட்டு நம் கண்களை விரியச்செய்வது அலங்கரிக்கப்பட்ட , பெயிண்ட் செய்யப்பட்ட அகல் விளக்குகள் ! ரங்கோலி கோல டிசைன்கள் , அதற்கான பவுடர்கள்!
இந்த நான்கு நாட்களில் செம ஆஃபர்கள் பறக்கும் , ரெண்டு எண்ணெய் பாட்டில்கள் , கடலை மாவு பாக்கெட்டுகள் , ஜாமூன் பாக்கெட்டுகள் ( நா அப்படித்தான் வாங்கி வந்தேன்! எழுத்திலும் நேர்மையானவள் :P) , மைதா மாவு இப்படி அனியாயத்திற்கு உசுப்பேற்றிவிடுவர் .
செஞ்சே ஆகணும் ந்ஞ் நினைக்காமல் பெண்மணிகள் வெளில வரவே முடியாது ! சில ஆண் moneyகளும் !
ஆங்காங்கே பாகிஸ்தானி , ஆஃப்கானி டைலர்கள் கடையுடன் காத்திருப்பர் , வாங்கிய துணியை தைக்க வருவரே ! பிகுவும் நடக்கும்..! எங்களால் முடியாது சுரிதார்..சூட் தைக்க என்று !!
அப்ப அங்க , சல்வார் மெட்டீரியல் , சாரி ல்லாம் கிடைக்குமா என்றால் , பூனே , சூரத் , லருந்து டைரக்டா வந்து இறக்கி கூசாமல் இந்தோனேசியாவிலிருந்து வந்தது என்று சொல்லி விற்பர் !
லேட்டஸ்ட் மும்பை டிசைகள் வந்திறங்கி இருக்க , இவிட வரு , அந்தர் ஆயியே ! என பல மொழிகளிலும் புரோக்கர்கள் அவர்கள் சரக்கை நம் தலையில் கட்ட முனைய ,
பெரிய இந்தியர்களால் நிர்வகிக்கும் ஷாப்பிங் மால்கள் Half price offer , 1+1 free , 75% sale இப்படியெல்லாம் போட்டு உள்ளிழுத்து , நம் பர்ஸை காலியாக்குவார்கள் !
அடேங்கப்பா..நம்மூர் காசுக்கு இவ்வளவா என கன்வர்ட் செய்துப்பார்க்கும் கணவான்கள் ரெங்கநாதன் கடைவீதி , பனகல் பார்க் ஆடம்பரங்களில் சிலதை வாங்கி வந்து இங்குள்ள ட்ரெஸ் ஆஃபர்களை, நோட்டம் விட்டும் பெருமூச்சு விட்டே ஏஸியை சூடாக்கிவிடுவர் !
நகைக் கடைகள் புது மணப் பெண் போலவும் , மக்கள் மொய்த்திட , திருமண ..அடச்சே !! திருவிழாக்கோலம் காணும்.
பெண்கள், குழந்தைகள் பண்டிகை உற்சாக பீறிட .. இன்று மாலை வீட்டு வாசலை விதவிதமான tea lights சின்ன சின்ன மெழுகு விளக்குகள் வைத்து அழகு பார்க்க ,
ரங்கோலிப் போடத் தெரியாதவர்களும் , ஸ்டென்ஸில் வைத்து , டிசைன் வரைந்து ஒப்பேற்றுவர்.smile emoticon tongue emoticon
வாசலை , வீட்டினை அலங்கரித்து இரவு ஒரு சேர்ந்த கும்மி சாப்பாடு (அதாங்க get together party) ஏற்பாடு செய்து பல வீட்டு பட்சணங்கள் , கூச்சமே இல்லாமல் செம , சூப்பர் டேஸ்ட் என்று சொல்லியே பரிமாறப்படும் ! 😆😊
டிவியை, நாங்கள் , காலை இங்க போடும்போதே,( இங்கே 4.30 அங்கு 6 am) மங்கள இசைவாசிச்சுட்டு நாதஸ்வர வித்வான்கள் ரிலாக்ஸ் மோட் க்கு போயிருக்க , வீட்டின் முன்னேற்றத்தில் முன் நின்று உதவுவது ஆண்களா பெண்களா என ஐயா என்ன சொல்றீங்க இப்ப என பட்டி மன்ற நடுவர் பேச , விழுந்து , விழுந்து சிரிக்கும் முதல் வரிசை , மாமா , மாமி முதல் நமட்டு சிரிப்புடன் அடக்கி வாசிக்கும் அக்காக்கள் வரை எடுத்தக் கை தட்டல் க்ளிப்பிங்க்ஸ் ஏ மாறி மாறி ஓடிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சிகளில்!
இல்லன்னா , புதிதாக பெயர் சூட்டப்பட்ட கதா நாயகி சிரித்துப்பேச , அவரை மிக பவ்யமாகப் பார்த்தப்படி புதுமுக இயக்குனர் ஆங்கர்களின் சிரிப்புக்கேள்விகளுக்கு சீரியஸ் பதில்ளித்தப்படி இருப்பர் !.
வார நாட்களில் தீபாவளி வரும் பட்சத்தில், தீபாவளி பார்ட்டி செபிலிரேட் செய்யவே, " என்ன , உங்கப்பா வீட்டு ஆபீஸ் ந்னு நினச்சியா!! " என அலம்பல் செய்துஆபீஸில் தீபாவளி லஞ்சுடன் (டீம். மெம்பர்ஸ் உடன்
லேட்டஸ்ட் செஃபீ Fb யில் அப்டேட் ஆகிருக்கும்) லீவு எடுக்காத கண்ணிய கணவர்களால் காலையிலே மனைவியிடம் சீன் போடப்படும் !
" இட்லி , வடை எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா , அவர் கிளம்பறதுக்குள்ள செஞ்சேன்! " என தலைகள் மறைந்ததும் (ஸ்கூலும் இருக்குமே) இல்லத்தரசிகள் சோபாவில் தஞ்சம் புகுந்து ,டிவி ரிமோட்டுக்கு உயிர் தந்திடுவர்! .பார்க்காம விட்ட பாடாவதிப் படங்களை ப் பார்த்து ஜென்ம சாபல்யம் அடைவர் !
ஆபீஸ் போற லேடீஸ் .. அங்கே traditional outfit ல். .அட நம்மூர் புடவை தாங்க .. அந்தப் பார்ட்டி ஜோதியில் ஐக்கியமாயிடுவர்.
இங்கே , பெரிய மசூதிக்கு அருகில் , பெரிய மனதுடன் ஒதுக்கப்பட்ட மாடிக் கோவிலில் முதல் நாளில் இருந்தே , ஒரு பாதாம் போட்டால் பாதாம் எடுக்க முடியாத அளவு கூட்டம் நெருக்கித்தள்ளும் ..ஆனாலும் அங்கு சென்றே பக்தியை பறைசாற்றுவோம்!
அப்படின்னா வெடி வெடிப்பதில்லை யா இதானே கேட்கறீங்க ? உஷ் .. பேசவேக்கூடாது !! ஆனால் வெளியில் வெடிச்சத்தம் கேட்கும்.
ரங்கோலி , சீரியல் லைட்ஸ், வரிசைக்கட்டி ஊருக்குப் பேசும் போன் கால் , விடாமல் நாட்டு நினைவையும் பண்டிகையின் மணத்தையும் அள்ளித் தரும் நம் டிவி சேனல்கள் , நம் நட்புக்கள் இவைகளே தீபாவளியை சிறப்பிக்கும் காரணிகள் துபாயில் ...


No comments:

Post a Comment