Wednesday 23 March 2016

அடுத்த அலப்பறை.

அப்பார்மெண்ட் அலப்பறைகள் என சொ(நொ)ந்தக்கதையை எழுதியிருந்தேன். ஆப்பிரிக்கன்ஸ் என்றாலே இப்படியா என நினைக்கலாம்..பலர் தங்கியிருந்தால்..விட்ட அஜாக்ரதையான விஷயம்..முழுக்கட்டிடத்தையே அசைத்துப்பார்த்தது அன்று.. இன்னொரு நாள்..

இரவில்.. கணவருடன் நடந்து அருகிலுள்ள கடைக்கு சின்ன வாக்கிங் போல  பேசியப்படியே செல்வது. யாருக்குதான் பிடிக்காது.. !!

அப்படித்தான் பாருங்க..ஒரு நாள் நைட்ல  நானும் என்னவரும்..வாக் போயிட்டு , திரும்பும் போது, எங்கள் பில்டிங் வாட்ச்மேன் அவரும் தமிழ்தான்..(எங்கள் ஹவுஸ் ஓனர்..அரேபியப் பெண்மணி க்கு தமிழர்கள் மீது மட்டுமே நம்பிக்கையென்பதால்..தமிழ் வாட்ச்மென் களைப்பெறும் புண்ணியத்தைப்பெற்றுள்ளோம்! ) அவரிடம் பேச்சுக்கொடுத்தேன். "என்ன , நல்லாருக்கீங்களான்னு !! "
" எங்கம்மா !! "

" ஏன்..இப்படி அலுத்துக்கறீங்க !! என்னாச்சு !"  இது என் கணவர்.

" மத்தியானம் மேடம் வீட்ல இல்லயா..ஆம்புலன்ஸ் , போலீஸ் வந்துச்சே ! உங்க ப்ளோருக்கு ,தெரியாதா !! "

"போலீஸா
.வந்துச்சா.. எனக்கு தெரிலயே !! நா லஞ்ச் ல பிஸியா இருந்துருப்பேன் .ஏன் என்ன ஆச்சு !! " (இங்கே அத்தனை ஈஸியா போலீஸ் வராது..வந்தால் விவகாரம் தான் !! )

" ஆமா..நீங்க வெளில வந்து எட்டியேப் பாக்கலையே ! உங்க வீட்டுக்கு எதிர்ல அந்த மலையாள பேமிலி வீட்டுக்கு தான் வந்தாங்க..அந்தப்பையன் .. வந்துக்கூப்பிட்டான்..என்னை..அவசரமா வாங்க தாத்தா .. கீழக்கிடக்கார்ன்னு !!
நானும் மேல ஓடினேன் !! "

சஸ்பென்ஸ் தந்து நிறுத்தி ..நொந்தப்படியே மூச்சுவிட்டுக்கொண்டார் !!

"ஐயோ..என்னாச்சு.. !! "

" அந்தப்பையன் வந்துக்கூப்பிட்டுப்போனேன். வாசக்கதவு தாப்பாள் போடல.. தொறந்து உள்ள ப்போனா , அவன் தாத்தா உடம்பெல்லாம் ரத்தம்.ரத்த வெள்ளத்துலகிடந்தாரு ! .மேலக்கத்திக்குத்து நல்லவேள மயக்கந்தான் !". நிறுத்திவிட்டு என் கண்களின் பீதியைப் படித்தார் !

"அப்பறம் ?! "

"அப்புறமென்ன..போலீஸ்க்கும் அவன் அப்பா அம்மாக்கும் சொல்லி.. அவங்க வந்து.. ஆம்புலன்ஸ்ல அனுப்பிவச்சோம்.
நீங்க வெளில வந்து எட்டியேப்பாக்கலயே ! " என்றார்..

"ஓ..இத்தன நடந்துருக்கா ! எப்படி ஆச்சாம் !! " வாயும் கண்ணும் விரிஞ்சது மூடலையே எனக்குதான் ..

"அவருக்கு ஊர்ல யே இருந்துருக்கு தண்ணிப்பழக்கம் ! இங்கத்தனியாக்கூட்டிட்டு வந்துட்டாங்க.. வந்தவரு..கிடைக்கலன்னாதும்... இப்படி தானே உடம்புல கத்தியாலக்கிழிச்சுக்கிட்டாரு ! வயசு இருக்கும் 70 .. பொழச்சுடுவார்ன்னு நினக்கறோம் ! "

" இதெல்லாம் ?! "

"அவரு மகனும் மருமகளும் வந்து சொல்லித்தான் தெரியும் !! "

"அப்பறம்.. "

" அப்பறமென்ன..இவ்வளவு நேரம்.ப்போலீஸ் கூடத்தான் இருந்தேன் ! இப்பதான் இது சூஸைட் அட்டெண்ம்ட் ந்னு என்னை விட்டாங்க ! அந்தப்பேரப்புள்ள அத்தனை அழகா இங்கீலீஷ்லப்பேசுது.. அதுல தான் என்னை நம்புனாங்க ! இல்லன்னா நாந்தான் உள்ள இருக்கணும் !"

"ஓ..இத்தனை நடந்துருக்கா ..நா உள்ளயே இருந்துருக்கேன் ..ஒண்ணுமே தெரிலயே ! "

"நீங்க மட்டுமில்லங்க..அவங்கப்பக்கத்து ப்ளாட்லயே யாரும் கதவைக்கூட திறக்கல.. ! அரபில யாரு சொல்லிப்புரியவைக்க முடியும் அவங்களுக்கு ! " இது வாட்ச்மேன் .

" நல்லதாப்போச்சு.. வழக்கம் போல , போலீஸ் வந்துபோது நீ 

தலை நீட்டிருந்தான்னா, உன்னக்கூட்டிட்டுப்போய் உக்காத்தி வச்சிருப்பாங்க !!  நாந்தான் உன்னை போலீஸ்  ஸ்டேஷனுக்கு வந்துக் கூட்டிட்டு வரணும் ! !"

இது என்ற கணவரு.. !

நான்.. வழக்கம்போல ஙே தான் !!

( பி.கு: காவல்துறை.. சம்பந்தப்பட்டவர்கள் தற்கொலைதான் என சரியானக்காரணம் தரும் வரை , சாட்சியாகப்போனவரை அனுப்புவதில்லை என்றறிந்துக்கொண்டோம் !  )

No comments:

Post a Comment