Saturday 19 March 2016

ஆ...ஆ...அப்பார்ட்மெண்ட் அலப்பறைகள் !!

அப்பார்ட்மெண்ட் அலப்பறைகள்

அன்றும் வழக்கம்போல மகளை அழைத்துவர லிப்டில் ஏறினேன்.

வயிற்றில் இருப்பதாக எண்ணிவந்தக்குடல் வாயருகே எட்டிப்பாக்கும் பீல் !

கை அனிச்சை செயலைப்பற்றி சயின்ஸில் படித்ததை நினைவூட்டிப்பார்த்தது ! பட்டென நாசியை இழுத்துப்பிடித்தது !

நிற்கமுடியாமல் கால்கள் நடுங்க லிப்ட் மட்டும் அழுத்துபவர்களின் ஆணைக்கிணங்க நின்று நின்று பொறுமையை ஓட ஓட விரட்டிக்கொண்டிருந்தது.

கெட்ட மணத்தின் முன் பே உயிர்காக்கும் மருந்துப்போல நல்ல மணத்தை நாடும் மனித மனம் என்பது மூளை உணர ஆரம்பித்தது. லிப்டில் ஏறிய நட்புக்களும் அதே நிலையில் இருந்ததைக்கண்டு ,

அப்பாடா ! நமக்கு மட்டுமில்ல இந்தக்கஷ்டம் என ஏனோ அந்த நிலையிலும் ஒரு நொண்டிசமாதானம் மனம் சொல்லிட  ,

ம்க்கும் ரொம்ப முக்கியம் என்னக்காரணம் என மூளை ஆராயத்தொடங்க அதன் விளைவாக, வாய் பேச ஆரம்பித்தது !

வாயைத்திறக்கவும்..லிப்ஃட் தரையை முத்தமிடவும் ஒன்றாக நிகழ, வெளியே ஆப்பிரிக்க நாட்டைச்சேர்ந்த சில இளைஞர்கள் , ஒரு முது இளைஞி யும் (பின்ன வயசு நாற்பது இருக்கலாம்.. அவரது தோற்றம்  அவர் கண்டத்தையே சொல்லாமல் சொல்லியது !! ) பலப்பொருட்களை கட்டிடத்தின் வாசலுக்கு இழுத்துச்செல்ல மல்லுக்கட்டிக்கொண்டிருந்தனர்.

அப்படி என்னதான் நடந்தது..மினி பேட்டிக்காக வாட்ச்மென் அறையை நோக்கி நடந்தேன் !

மூக்கைப்பொத்திய கைகளையும், அங்கு வீசிய துர் நாற்றத்தையும் தாண்டி நொந்தக்குமரனாக வாட்ச்மேன் "அதையேன் கேக்கறீங்க .. வழியில 6 வது ப்ளோர்ல ஸ்மெல் அதிகமாயிருந்துருக்குமே !! "

ஆமா !! என தன்னுச்சையாக தலையசைத்தோம்.
அதற்குள் என் ப்ரெண்ட் , "யாராவது இறந்துட்டாங்களா ?? அப்பார்ட்மெண்ட் பூட்டியே கிடந்துச்சா ? இப்படி நாறுதே!" என போட்டுடைத்தார் !!

"ஆமாங்க..ஒரே போன் மேல போனு.. !! இவனுங்க தான் கட்டடத்தையே நாற அடிச்சுட்டானுங்க ! "

"யாரு..இந்த ஆப்ரிக்கன்ஸ் ஆ !! "??

கேட்பதற்காக திறந்தவாயை இன்னொரு கையால் அழுத்தி மூடிக்கொண்டோம்..அங்கு 3 ஆண்கள் அலட்டிக்கொள்ளாமல் சாமான்கள் அடங்கிய பைகள் , சேர்கள் என லிப்ஃடிலிருந்து இழுத்துக்கொண்டுப்போய் வாசலில் ட்ரக்ல் ஏற்றுக்கொள்ள அடுக்கிக்கொண்டிருந்தனர்.

லிஃடிலிருந்து ஏதோ திரவம் சிந்தி வடிவேலு படத்தில் போடப்பட்ட மிளகாய்ப்பொடிப்போல வாசல் வரை லஷ்மண் ரேகாப்போல நீண்டுப்போயிருந்தது. உற்றுக்கவனித்ததில் அதுவே அந்த துர் நாற்றத்திற்கும் காரணமென உணர்ந்தோம்.

வாட்ச்மேனே தொடர்ந்தார் !! " இந்த , கும்பல் நிறைய பேரு , அந்த ப்ளாட்ல இருந்தானுங்க , அதுலப்பாருங்க ..ரெண்ட் ஒழுங்காக்கட்டல , அதனால முனுசிபாலிட்டில நோட்டீஸ் தந்து போலீஸ் இழுத்து மூடிச்சு , அப்ப இந்த கண்றாவிப்பிடிச்சவங்க ...ப்ரிட்ஜைக்காலிப்பண்ணாமல் அப்படியே மெயின்ப்புடுங்கிட்டு கதவை சீல் வச்சிட்டாங்க ! எனக்கென்னன்னுப்போயிட்டானுங்க. இன்னிக்கு காலிப்பண்ணசொல்லி ஆர்டர் வந்துருச்சி..அதுல போலீஸ் ...ப்ரிட்ஜோட டஸ்ட் பின் கிட்டதான் வச்சு வெளில ஓப்பன் செய்யணும்ன்னு சொல்லிருக்காங்க..இவனுங்க... அப்படியே வீட்டுக்குள்ளயே ஓப்பன் செஞ்சுட்டானுங்க ! அங்க உள்ள வச்சதெல்லாம் அழுகி ஓட அதோடயே சாமான்கள இழுத்துவந்துட்டானுங்க..அதான் பில்டிங்கையே நாறடிச்சுட்டானுங்க !! "

" அட என்னங்க ..காய்கறி வீணப்போய் அழுகிருந்தா இந்த நாத்தமா நாறும் ?? " இது நான் .

" ஐய்யோ ஐயோ ..நீங்க என்னம்மா இத்தன அப்பாவி யாக்கேக்குறீங்க ! அவங்க வச்சது மாட்டுக்கறியும் , பன்னிக்கறியும் அப்படியே ஓப்பன் பண்ணி முழுசா வச்சிருந்தாங்க.. அது அழுகி அவங்க கிச்சன் முழுக்க குளமாதிரி கட்டிருந்திருச்சு. "  என நானும் என் ப்ரெண்ட்ம்..ஆங்..உங்கள மாதிரியே தான் வாய் வழியே வர இருந்ததை அடக்கிக்கொண்டோம்..அட வாந்திய சொன்னேங்க !!

"அவனுங்கக் கூலாகேக்கறானுங்க..நல்ல சுமெல்லு... தெரில உங்களுக்கு ந்னு..??

அவனுங்கள என்ன செய்ய ! போவட்டும்ன்னு தான் நா உக்காந்துருக்கேன்... அப்பறந்தான் சுத்தஞ்செய்யணும் "  எனக்கூடுதலாக அவரதுக்கஷ்டத்தையும் சேர்த்துப்பேசினார்...

வாயில் வந்ததை அடக்கியப்படியே மகளுடன் எங்கள் ப்ளோருக்கு ஓடிவந்து... ஒருமுறை பாத் ரூம்க்கு போய் உவ்வேக்...!!

அன்று மாலையே கீழே பயந்து பயந்து வந்தேன்..சாமான்கள் காணாமல் போயிருக்க..மிகவும் டயர்டாக இருந்தார் வாட்ச்மேன் .. ஆனாலும் லிஃப்ட் அந்த துர் நாற்றத்தை டைவர்ஸ் செய்ய மறுத்து..அடம்பிடித்தப்படி இருந்தது..

அவரோ..இப்ப க்ளீனாயிடுச்சாங்க... ஒரு முழு டெட்டால் கேன் க்ளீனிங்..3 ரூம் ரெப்ஷனர்ம் காலி...என்றிட ..பாவம் அவருக்காக ஆமா..பெட்டரா இருக்கு என்றுக்கூறி..ஓடிப்போனேன் !! நினைக்க நினைக்க உவேக்கை தந்தப்படி இருந்தது அந்த துர் நாற்றம்.. !! மாசக்கணக்கில்... இருந்ததாச்சே !!

எதோ , யாரோ இறந்து அதானோ என்று பயந்துப்போயிருந்தோம் ...நல்ல வேளை ! நல்லா வந்து சேர்றாங்கப்பா என்றுப்பேசி மாய்ந்துப்போனோம் !!

இந்த அலப்பறையை ஒன்றுமில்லையென ஆக்கிப்பார்த்தது..அடுத்த திகில் அனுபவம்..அது !! ???

அடுத்ததுதான் !!

No comments:

Post a Comment