Thursday 29 October 2015

நலம் காக்கும் நாராயணன் , ஸ்ரீ சத்ய நாராயணன்.

வெளி நாடு வந்து , பார்த்த
வேலையின்  மாறுதலால் பல இண்டர்வியூக்களைப் பார்த்திருந்தவர் , ஒண்ணுமே க்ளிக் ஆகாமல் ,  அலுத்துப்போய் நணபர்களின் ரூமில் அமர்ந்திருக்க , உடனிருந்த ரூம் மேட் ஸ்ரீராம் , " வர்றீயாப்பா..என் ப்ரெண்ட் ஒருத்தர் , தன் வீட்ல சத்ய நாராயணப்பூஜை செய்யறார் ..போகலாம் ! "  எனவும் , பலத்த யோசனை , நாம் கேள்விப்பட்டதே இல்லையே , சரி என்ன தான் பார்ப்போமே என்ற ஆவல் உந்தித்தள்ள ,
பூஜையில் கலந்துக்கொண்டவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. பூஜையில் கலந்துக்கொள்ள வந்தவரின் மனக்குறையை பூஜையின் சங்கல்பத்தில் சேர்த்து , பூஜை செய்தவர் தனது மந்திரத்துடன் சொல்ல , சென்றவருக்கு ஆச்சர்யம் கூடியது !இவர் வேலைதேடுகிறார் என இவரது பிரார்த்தனை பலிக்கவும் அன்றை ய சங்கல்பத்தில் சேர்த்திருக்கின்றனர் கேள்விப்பட்டே ! 

அன்று அந்த வீட்டில் நடந்த பூஜையில் கலந்துக்கொண்டவர் பிரார்த்தனையில் தனக்கு சீக்கிரமே வேலை கிடைத்தால் தானும் பூஜை செய்வதாக வேண்டிக்கொள்கிறார் . அதன் ,பின் சென்ற ஒரு இண்டர்வியூ ஒகே ஆகி , வேலையும் கிடைத்து , குடும்பத்துடன் சேர்ந்தவர் , மனைவியுடன் இதை ப்பகிர , அவளும் நம்மால் இயலுமா.?!!
.அப்படி என்ன பூஜை என
முதலில் சில மாதங்கள் அலட்சியம் செய்தவள். 

பின் கணவரது தீவிரம் கண்டு நண்பர்களை அழைத்து முதன் முறை சத்ய நாராயண பூஜையை செய்தாள் !!

அன்று எதோ ஒரு தெய்வீகம் வீட்டில் பரவியதை உணர்ந்தவர்கள் அதை இன்று வரை தொடர்கின்றனர் ! அந்த தம்பதிகள் சுமிதாவும் ரமேஷுமே !!
ஒவ்வொரு மாதமும் பூஜைக்கு தானாகவே இணைத்துக்கொண்டு வந்தவர்களில் பலரது விருப்பங்கள் பிரார்த்தனைகள் நிறைவேறியதை அடுத்தஅடுத்த  முறை அவர்கள் எங்களின் பூஜைக்கு வரும்போதே சொல்லக்கேட்டு விக்கித்தேப் போனோம் !
நீண்ட காலமாக இருந்த கனடா வீசா அப்ரூவல் , யூ எஸ் ல் படிக்கும் மகனுக்கு ஸ்காலர்ஷிப் பின் வேலை , தர வேண்டிய பணம் தராமல் இழுத்தடித்தப் பிரச்சனை தீர்ந்தது , ஜெயிலில் இருந்த மகனின் விடுதலை (இது இங்கிருந்த ஸ்ரீலங்கன் பணிப்பெண் துன்பம்) , பெண் திருமணம் இப்படி பல பிரார்த்தனைகள் அவை பலித்ததையும் கேட்டு மெய் சிலிர்த்துதான் போனோம் !
வீடுகள் பல மாறினாலும் பௌர்ணமியன்று பூஜை தொடரும் எங்கள் பூஜை சில குடும்பங்களுக்கும் பரவி அவர்களும் அதே தினத்தில் செய்துவருவது கூடுதல் மகிழ்ச்சி !
சரி இத்தனை சிறப்பு வாய்ந்த ஸ்ரீசத்ய நாராயண பூஜையை எல்லாரும் செய்யலாமா ! செய்யலாம் என்றால் எப்படி !!
இதானே !!
இதோ அதை சொல்லத்தான் இந்தப்பதிவு .. !
இப்பூஜையின் சிறப்பம்சமே , முழுமையான நம்பிக்கையும் , பக்தி , சிரத்தை மட்டுமே !!
எந்தெந்த நாட்களில் செய்யலாம் ..
வெள்ளிக்கிழமைகள் ,திங்கள், ஞாயிறு .

அமாவாசை , புரட்டாசி மாத சனிக்கிழமைகள் 
தீபாவளி, சங்க்ராந்தி முதலிய 
பண்டிகை நாட்கள் , பௌர்ணமி தினங்கள்.
என்ன செய்ய வேண்டும் பூஜைக்கு :
பூஜை செய்பவர் விரதம் மேற்கொள்ள வேண்டும் ! கூடுமான வரை பால் பழம் சாப்பிட்டு கடைபிடிக்கலாம் .
முதல் நாள் இரவே , தம்பதியர் இறைவனின் திருவுருப் படத்தின் முன் நமஸ்கரித்து நாளை பூஜை செய்ய நினைந்து அவனருள் வேணி பிரார்த்தித்திக்கொள்ள வேண்டும் .
மறு நாள் காலை தலைக்கு எண்ணெய் தேய்த்துக்குளித்து , தூய ஆடைகள் அணிந்து மாலையில் பூஜையை துவக்கலாம்.
என்னவெல்லாம் தேவை பூஜைக்கு ...
ஸ்ரீ மஹா லஷ்மி திருவுருப்படத்துடன் , ஸ்ரீ சத்ய நாராயணர் திருவுருவப்படம் .
செம்பு கலசம் (அல்லது வெள்ளி அவரவர் வசதிகேற்ப)
மனை , வாழை மரம் , வாழையிலை , மாவிலை , பழங்கள் .
நைவேத்தியம் செய்ய..அரிசி , கோதுமை மாவினால் ஆன பதார்த்தங்கள் (இவை மிக கவனமாக , மிகுந்த சிரத்தையுடன் செய்ய வேண்டும் )
இவை அனைத்தையும் விளக்கிடும் ஸ்ரீ சத்ய நாராயண விரத மகிமை அல்லது பூஜை எனும் புத்தகம்.
முதன்முதலில் செய்யும் போது புரோகிதர் மூலம் செய்து பின் விருப்பப்பட்டால் நாமே இல்லத்தில் புத்தகத்தில் கூறியப்படியே செய்யலாம் .
இந்தப் பூஜையில் முதலில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து , வி நாயகரை வழிபட்டு , பின் நவகிரக மூர்த்திகளை ஆவாஹனம் செய்து , அர்ச்சித்து கலசத்தில் ஸ்ரீ சத்ய நாராயணரை வருவித்து , படத்துடன் அவரை மனதார துதித்து அர்ச்சித்து , பின் இறுதியில் நைவேத்தியம் , துதித்து பாடல்கள் (தெரிந்தால்) பாடி , கதைப் படித்து
புனர் பூஜை செய்து , நிறைவு செய்யவேண்டும்.
இவையனைத்தும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். அப்படியே தொடர்ந்தால் போதுமானது .
இப்பூஜை செய்பவரது வீட்டில் மட்டுமல்லாது ,வருபவர்களும் அசைவம் உட்கொள்ளாமல் சுத்தமாக பங்கேற்க வேண்டியது மிக முக்கியமான அம்சம்.
இறுதியில் இறைவனுக்கு நைவேத்தியம் செய்த பதார்த்தங்களை சுற்றம் சூழ அனைவருக்கும் தந்தப் பின்பே பூஜை செய்தவர் உண்ண வேண்டும் என்பதும் சிறப்பான அம்சம் .
ஆண் , பெண் யாவரும் செய்யலாம் . பெண்கள் விரதம் மேற்கொண்டு , நைவேத்தியத்துடன் கதை படித்து பூஜையை நிறைவு செய்வதாகக் கேள்விபடுகிறேன் .
இத்தகைய சிறந்த ஸ்ரீசத்ய நாராயண பூஜையை செய்து வருபவர் வாழ்வில் பல சிறப்புகள் , மேன்மையடைவதை கண் கூடாக காணலாம் .
இதனை எழுதுவதை பெரும் பேறாக எண்ணுகிறேன் .
ஸ்ரீசத்ய நாராயணர் அருள் அனைவருக்கும் கிட்டிட பிரார்த்தனைகள் !
ஓம் ஸ்ரீ சத்ய நாராயணாய நமஹ. ||

No comments:

Post a Comment