Monday 26 October 2015

Bajrangi baijan நாயகி

கீதா  இந்தியச்சிறுமி , பாகிஸ்தானில்,  லாஹூர் ஸ்டேஷனில் சம்ஜூஹா எக்ஸ்ப்ரஸில் தனித்து விடப்பட்டவர் !

ஏழு எட்டு வயதிருக்கலாம்..

தனித்து இருந்தக் குழந்தை என்ன ஆனாள் ? எப்படி வந்தாள் ? லாஹூர் ஸ்டேஷனில் தனியே அமர்ந்தவள் , இன்று 24 வயதில் தாயகம் திரும்பியிருக்கிறாள் ..எப்படி நடந்தது ?

வாய் பேசமுடியாத காதும் கேளாத மாற்று திறனாளிக்குழந்தை எங்கனம் தன் இருப்பிடம் , தாய் தந்தைப்பற்றி கூற முடியும் !

மண்ணில் மனிதம் பரவி ..ஈரம் ஓடியுள்ளதை நிருபிக்கிறார் ..ஆம் இப்போதைய இவர் வயது 24. பதினைந்து வருடங்கள் தனித்து விடப்பட்டு பாகிஸ்தானில் , ஈதி (Edhi foundations) ஃபௌண்டேஷன் ஸ் என்ற அமைப்பின் மூலம் ஆதரிக்கப்பட்டு , கராச்சியிலேயே , தத்து எடுக்கப்பட்டு வளர்ந்திருக்கிறார்.

ஈதி ஃபௌண்டேஷன் பாகிஸ்தானின் மக்கள் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டது . கீதா என்றப்பெயரையும் தந்து சிறுமியைப்பெண்ணாக்கியுள்ளனர்.

"அவளது வீட்டைச்சேர்வது எங்களுக்கு மகிழ்ச்சியே " !! என்று கீதாவை பராமரித்து தன் குழந்தையாக பாவித்த அந்த தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் மகன் Faisal Edhi .

மனிதம் துளிவிட்டு,  அணு ஆயுதத்தால் நமக்கு சவால் விடுவதாக செய்திகள் கிடைக்கும் இந்நேரத்தில் , நம் தேச கீதா நம்மிடம் வந்து சேர்ந்திருக்கிறார் இந்தியப்பெண்ணாகவே !

இவரை பீகாரை சேர்ந்தக்குடும்பம் சொந்தம் கொண்டாட , DNA test மூலம் கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளது நம் அரசு !

வாழட்டும் கீதா , வெல்லட்டும் மனிதம் , துளிர்க்கட்டும் நேசப்பூக்கள்...

No comments:

Post a Comment