Saturday 29 August 2015

வாடிக்கையாளராக நொந்த சம்பவம்

கோவையில் குழந்தைக்கும் கிடைக்கும் மரியாதை..!

அதிலும்  கிடைத்தது  ஓர் அதிர்ச்சி..

கோவையை விட்டு கிளம்பும் நாள்..பிஸியான நாளில்.. ஒரு சிறிய வெள்ளி அணிகலன்  வாங்க  தேடினேன்..தங்கியிருந்த பகுதிகளில் கிடைக்கவில்லை.. அம்மாவுடன் வெளிசென்று திரும்பிய வேளையில் டாக்ஸி டிரைவரை கேட்க..எங்கள் பகுதிக்கு செல்ல வேண்டிய வழியில்..ஒரு நகைக்கடை கண்ணில்பட நிறுத்தினார்..

வெயிட்டிங் ல் போட்டு ..சாலையை கடந்து ஓடினேன்..

கண்ணில் பட்ட ஜூவல்லரி ..சற்று பெரிதாக இருக்கவே..நிச்சயம் கிடைக்கும் என உள் நுழைய..செருப்பை வெளியே விட்டு வாங்க..என்றார்..உள்ளே பணியில் இருந்தப்பெண்..விட்டு விட்டு நுழைய..கடையில் கஸ்டமர்ஸ் யாருமில்லை..முதல் தளமும்..ஏசியுடன் இருந்தது..என்ன வேணும் என்றப்பெண்ணை கவனிக்க..சற்று வசதியானவர் போன்றும்..அதிகம் பயிற்சி இல்லாதவர் போன்றும்..முகத்தில் ஒரு சோகமும் தெரிந்தது.

கடையின் முதலாளி என தென்பட்டவர்..கையில் முரட்டு ப்ரேஸிலெட்..கழுத்தில் கொத்தாக தங்கம் மினுமினுக்க நம்ப வைத்தார்..ஒரு படி மேலே போய்...கொத்தடிமை போலவே அந்தபெண்ணிடம் சீறினார்..போ..சும்மா நிக்கற..காமி என..அந்த பெண்ணும் வெகு அடக்கமாக வர..சரி..அவர் பொண்ணோ என்னவோ என..எண்ணி..நாம வந்த வேலையைப்பார்ப்போம் என என் தேவையைக்கூற அவர் எடுத்துத்தர
.பில் 560ரூ...

செலுத்த ..அவரிடம் தான் போக ..இன்னொரு ஆண் விற்பனை யாளரும் இருந்தார் அவருக்கும் அதே ஏக வசன மரியாதை.. ஜெர்க் ஆனது எனக்கு...

நான்..கிளம்பும் நாள் என்பதால் ..கிரேடிட் கார்டு நீட்ட..எடுத்து swipeசெய்தவர்.. எரர் ந்னு வருது..." என்ன கார்டு தந்த நீ "  என்றார்..அதிர்ச்சி தொடர...
" இது இண்டர்நேஷனல் கார்டு..ஓ..உங்க பேங்க்ல பேசுங்க..சில பேங்க்ஸ் அக்செப்ட் பண்ணல..கஸ்டமர் சொன்னாங்க ந்னு சொல்லுங்க..ங்க.".அழுத்தி சொன்னேன்..!!!

" இங்க பக்கத்துல எங்க இருக்கு .ATM "  என்று நான் கேட்டதும்
" ..இப்படியே வலது பக்கமா..போ..அதில் 4 பில்டிங் தாண்டி இருக்கு.."  என்று சொல்லி..மேலும் புரியாதோ.என்றெண்ணி.. அரைகுறை ஆங்கிலம் வேற..அட ராமா..நல்ல கடை என தலையிலடிக்காத குறையாக..

கடையை விட்டிறங்கி..இரு பக்கமும் பார்க்க..இடபுறம் கர் நாடக வங்கி தென்பட , வேண்டியதை எடுத்து உள் நுழைந்ததும்..ஒரு அலட்சிய பார்வை..என்ன அதுக்குள்ள..எடுத்தாச்சா ! ந்னு ஒரு சந்தேகப்பார்வையும்..

கார்டுல எதோ சதி செய்ய முயற்சி செய்த மாதிரி..
அருவருப்பான அந்த முகத்தை...தவிர்த்து பணத்தை தந்தேன்..

( எங்கப்போய் எடுத்த..என கேட்க...
" நான் இங்கே பக்கத்துலயே இருக்கே கர்னாடகா பேங்க்..ATM.., ஏன்..நீங்க பார்த்ததில்லையா..இனிமே அங்கேயே எடுங்க..ங்க அதே அழுத்தத்துடன் பதிலளித்தேன்)

கூட இருந்த உதவியாளர்.. அந்த பெண் எல்லோரும்..PM , CM எதிரில் இருப்பவர்கள் போல..ஒரு அட்டென்ஷனில்..பவ்யமாக இருந்தது மேலும் வெறுப்பு...!!

பணத்தை பெற்றுக்கொண்டு மீதியை தரும்போது அவர் மொபைல் சிணுங்க..அழைப்பை ஏற்று.." ஓ..அவனா..எனக்கு தெரியாது..நா ஒரு நம்பர் தரேன்.. அங்க கேட்டா தெரியும்"  என எதோ கதை ஆரம்பித்தார்..

எதிரில் ஒருவர் இப்போது புளிமூட்டை சைஸில்..இவருக்குமேல்..மெதுவாக....
" அவனா..ஆமா அந்த நம்பர்ல தான் இருப்பான்"   என எனக்கு BP இருப்பதை உணர்ந்தேன்..

விற்பனை யாளர்..பவ்யமாக ஒரு பையில் போட்டு அதை அந்த...(தவிர்க்கிறேன்..சில வார்த்தைகளை.). அந்த ஓனர் தான் தர வேண்டும் ( அப்படி ரூல்) போலருக்கு நீட்ட அதை கையில் வைத்த வாறே இவர் கதை போனில்& நேரில் இருப்பவருடன்..

எனக்கு பொறுமை இழந்து..
" மொதல்ல  வாங்கினத தர்றீங்களா..டைம் ஆச்சு.. அப்பறம் உங்க பேச்சை கண்டினியூவ் செய்ங்க, சற்று கடுமையாக கூற.. "
எதிர்பாராத அவர்.. அலட்சியமா..தரும் முன்..நான் பிடுங்க..பில் கொடுங்க..எனஅதட்டினேன்..

 முறைத்தவாறே..போட்டு அனுப்பு என்றார்..

சர்தான் போய்யா..என்று முணுமுணுத்தவாறே..கதவை  சாத்தி விட்டு வந்தேன்..

எப்படி இவர் கடை இத்தனை பெரியதாய்...மனம் இவ்வளவு சின்னதாய்..,கோவையில் குப்பை கொட்டுகிறார்..என்ற எண்ணத்தில் சூடாக காத்திருந்த டாக்ஸியையடைந்தேன்...

இங்கு உள் நுழைந்ததும் வாடிக்கையாளர்களுக்கு தரும் மரியாதை தேவையற்று கண்முன் வர..இப்படி ஒரு கடையா..என அதிர்ச்சி மேலிட்டது...

அது என்ன கடை..அதானே...!! அது வேண்டாம் விடுங்க ...

இதுவும் ஒரு அனுபவம் .. அவ்வளவே...

No comments:

Post a Comment