நேர்மைக்கும் உண்மைக்குமெல்லாம் இப்ப மதிப்பு உண்டா !
இது நான் அடிக்கடி யோசித்துப்பார்க்கும் கேள்வி !
அதிசயமா இன்று ஷாப்பிங்க்கு கணவரும் வரேன்னு உள்ளே வர , சாமான்களை வேற வேற தளங்களில் தனித்தனியே எடுத்துக்கொண்டிருந்தோம் , டைம் மேனேஜ்மென்ட் க்காக. :)
நான் முதல் தளத்தில் முடித்து , கீழே பொது சாமான்கள் , வேறென்ன அதே சோப்பு , ஷாம்பூ , மளிகை சாமான் வகையறாக்கள் தான் ! ரொம்ப நாளேச்சே இவர் கூட வந்துன்னு நினைத்தவாறே , நான் உள் நுழைய அவர் ட்ராலியுடன் போஸ் தந்தார். அப்பாடா என்றிருந்தது.. வண்டி இன்னிக்கு நாம தள்ள வேண்டாமே ;)
அதற்குள் அங்கு செண்ட் விற்பனையாளர் பெண்ணிடம் செம சுவாரஸ்யமான உரையாடலில் இருந்தார் தலைவர் , சரி நிச்சயம் வாங்கிருக்கணும், என்னனெல்லாம் அணிவகுக்கப்போகுதோன்னு நினச்சப்படியே இவர் போட்ட, சே பேசினதை எட்டியிருந்தே ரசிச்சப்படி இருந்தேன் .
என் வேலையில் மும்மரமானேன் , அவர் வாங்கினதை எடுத்துப்போட்டுக்கொண்டு , என்னுடன் பேசியப்படியே ட்ராலி தள்ளிக்கொண்டு வந்தவர் , " சே என்ன ட்ராலி இது !! வீல்ஸ் சரியாவே இல்ல ! எப்படி இதக்கொண்டு , வாங்கி முடிக்கறது " என்று அலுத்துக்கொண்டார் !
அப்பாடா ! யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் ! பின்ன நானெல்லாம் எத்தனை கஷ்டப்பட்டிருப்பேன் ந்னு மனதில் நினைத்துக்கொண்டேன் !
சமாளித்தவாறே வந்தவருக்கு , பொறுமை டாடா பை சொல்லியதை உணர்ந்தேன் ! அங்கு சாமான்களை அடுக்கியவாறே இருந்த ஹைப்பர் மார்க்கெட் யுனிபார்ம் போட்டவரிடம் ஆரம்பித்தார் ! " என்னங்க..இது , நல்ல ட்ராலி வைக்கமாட்டீங்களா..சரியில்லன்னா டிஸ்போஸ் செய்ய வேண்டியதுதானே " என்று ! ஆங்கிலத்தில் பொரிய !
அவருக்கு மிக தர்ம சங்கடமாய், நெளிந்தார் . சுற்றி பலர் கூட ஆரம்பிக்க நானும் ,( உள்ளுக்குள் ஐயோ பாவம் ந்னு இருந்தது , அவரப்பாக்க )
அவருக்கு மிக தர்ம சங்கடமாய், நெளிந்தார் . சுற்றி பலர் கூட ஆரம்பிக்க நானும் ,( உள்ளுக்குள் ஐயோ பாவம் ந்னு இருந்தது , அவரப்பாக்க )
" இப்படித்தான் பல , சூப்பர் மார்க்கெட்ல இருக்கு , அவர் என்னங்க செய்வார் பாவம் " எனவும் , இவர் உடனே
" இதெல்லாம் விடக்கூடாதும்மா " ....!
போச்சுடா ந்னு மனதுக்குள் இவர் கோபத்தை ரசித்தவாறே என் மன லிஸ்ட்ல் இருந்த சாமான்களை ட்ராலிக்குள் நிரப்பக்கொண்டிருக்க அடுத்த 6 அடி நகர்வதற்குள் மீண்டும் எரிச்சலுற்று இம்முறை கஸ்டமர் கேர் , சூப்பர்வைசர் அனைவரையும் அழைத்து , " ஏன் இப்படி கஸ்டமர் கஷ்டம் புரியாமல் இருக்கீங்க !! " ந்னு சற்று காட்டமாகவே இந்த முறை குரல் தந்தார் !
(இந்த ட்ராலிகள் இருக்கு பாருங்க , எப்பவும்
நாம ஒரு பக்கம் இழுத்தால் அது இன்னொரு பக்கம் தள்ளும்..அதிலும் முழுக்கொள்ளளவும் கொண்டால் நம்மை நார்மலா மூச்சு வாங்க விடாது ! குப்புறத்தள்ளிதான் வேடிக்கைப்பார்க்கும் , தனித்தெம்பு வேணும்ன்னு நினச்சுப்பேன் !
நாம ஒரு பக்கம் இழுத்தால் அது இன்னொரு பக்கம் தள்ளும்..அதிலும் முழுக்கொள்ளளவும் கொண்டால் நம்மை நார்மலா மூச்சு வாங்க விடாது ! குப்புறத்தள்ளிதான் வேடிக்கைப்பார்க்கும் , தனித்தெம்பு வேணும்ன்னு நினச்சுப்பேன் !
இதே ட்ராலிகளில் குழந்தைகள் செய்யும் அட்டகாசங்கள் , அதுக்கு வாய் இருந்தா அழுதுடும் ! :D , கத்த வித்தை அத்தனையும் பசங்க அதில் தான் காட்டுவாங்க..! எத்தனை அனுபவிச்சிருக்கோம் , சும்மாவா :) )
என்ன தான் நடக்குது பார்ப்போமே ந்னு எனக்கு ஆவல் அதிகரிக்க , நமுட்டு சிரிப்புடன் ரசித்தப்படி நின்றிருந்தேன் !
செக்யூரிட்டி வெளியில் இருந்து ஒரு புது ட்ராலியுடன் , எங்க சாமான்களை மாற்றித்தந்து , சாரி கேட்டார்.
உடனே ஒரு நோட் தந்து அதில் கம்ப்ளைண்ட் எழுதித்தர சொன்னார்கள் ! அதை மிக கவனமாக செய்தார், என்னவர் ! வெற்றி பெருமிதத்துடன் வந்தவர் " இதெல்லாம் பாத்துட்டு பயப்படாமல் கேட்டு வாங்கணும் இல்லன்னா காரியம் நடக்காது" ம்பார் ந்னு எதிர்பார்த்தேன் ..இல்லை பொழைச்சார் ! :p
பின்ன சும்மாவா எத்தனை கேட்டிருப்போம் ! இவர்கிட்ட ... ;)
சமீப வருஷங்களில் நான் பார்ப்பது என்னவரிடம் .
..நோ காம்ப்ரமைஸ் , ஏன் பண்ணிக்கணும் என்பார் , ஹோட்டரில் தோசை கருகியிருந்தாலோ , சப்பாத்தி குறையா இருந்தாலோ கூப்பிட்டு தந்து வேற மாத்தித்தர சொல்வார் ! எனக்கு ஆச்சர்யம் பிடிங்கி திங்கும் :)
மறுப்பேச்சின்றி செய்வர். ஆனா வேற யாரும் அந்த சமயத்தில் கேட்காமல் ,நாம குரலை உயர்த்திக்கேட்பது என்னவோ போலிருக்கும் எனக்கு :)
இங்கு கஸ்டமர் கேர் பார்ப்பார்கள் , எதுவும் தவறென்றால் திருப்பித்தருவார்கள் , பொருட்கள் வாங்கி வீட்டுக்கு குறித்த நாளில் அனுப்பவில்லை என்றால் விட்டு கிழிக்கலாம் தயங்காமல் !
நானும் கொஞ்சம் மாறிருக்கேன் அது வேற விஷயம் ! பின்ன இத்தனை வருஷமா ஒண்ணா குப்பைக்கொட்டறதுக்கு அப்பறம் அர்த்தமே இல்லாமல் போயிடுமே :)
5 வருடங்களுக்கு முன்.. (சின்ன பிளாஷ் பேக் தான் .. )
ஊரில் , திருச்சியில் ஹெல்த் செக்கப்க்கு அமர்ந்திருந்தோம் ..சரியான , முறையான வழிகாட்டல் , ஆர்டர் படி இல்லாமல் இஷ்டத்திற்கு அலைக்கழித்தனர் . டாய்லெட் க்கு சில முறை சாம்பில்ஸ் எடுக்கப்போனோம். ரொம்ப மோசமான அனுபவம் , ஹெல்த் செக்கப் பிற்கு 4500 போட்டிருந்தார்கள் , ஆனால் சுகாதாரமாக இல்லை ! இவர் என்ன செய்யப்போறாரோன்னு நினைத்தப்படி இருந்தேன் .
ஊரில் , திருச்சியில் ஹெல்த் செக்கப்க்கு அமர்ந்திருந்தோம் ..சரியான , முறையான வழிகாட்டல் , ஆர்டர் படி இல்லாமல் இஷ்டத்திற்கு அலைக்கழித்தனர் . டாய்லெட் க்கு சில முறை சாம்பில்ஸ் எடுக்கப்போனோம். ரொம்ப மோசமான அனுபவம் , ஹெல்த் செக்கப் பிற்கு 4500 போட்டிருந்தார்கள் , ஆனால் சுகாதாரமாக இல்லை ! இவர் என்ன செய்யப்போறாரோன்னு நினைத்தப்படி இருந்தேன் .
அதே போல , (நம்ம கெஸ் தப்பாகுமா ;) ) முடிந்து வெளியே வரும்போது ரிசப்ஷனில் இங்கே கம்ப்ளைண்ட்ஸ் , feed back எங்கே தரணும் என்றார் , ரிசப்ஷன் பெண் வித்யாசமாக பார்த்தப்படி , அதோ அங்கப்போங்க ந்னு கைக்காட்டினார் !
அந்த டேபிளில் ஒருவர் தந்த ரெஜிஸ்டரில் எழுதிவைத்ததோடு இங்கே அட்மினிஸ்ரேஷனில் யார் இருக்காங்க , இன்சார்ஜ் என்று அவர் ரூம் போனோம் , ஒரு கிழி ,
அவர் " சார் ! ..நீங்க ..எங்கருந்து வர்றீங்க ? ’”,
ஊர் சொன்னதும் , குரலில் , பணிவைக்காட்டி( அதானே , பின்ன , நம்ம பிஹேவியர் பாத்தா , அன்னியன் அம்பி நினப்பு வந்துடுமே தானாவே ) , " சார் , பக்கத்துல இன்னொரு பில்டிங் கட்டறோம் சார் ! அதை ஓப்பன் செஞ்சுடப்போறோம் சீக்கிரமே ..நீங்க அடுத்த முறை ஹெல்த் செக்கப் வரும்போது பாருங்களேன் " என்று பூசி மொழுகிட வெளியே வந்தோம் !
வீட்டில் என் தங்கையிடம் விளக்க அவள் சொன்னாள் .." போதும் போ ! இது இந்தியா ! நீங்க வெளில வந்ததும் உங்களப்பத்தி கமெண்ட் செஞ்சுதான் சிரிச்சிருப்பாங்க ! இது மாதிரி எத்தனை பேரைப்பார்ப்பாங்க ! அல்ட்டிக்கவே மாட்டங்க " .
இருக்கட்டுமே , சொன்னோம்ங்கற திருப்தி நமக்கு என்று வழக்கமான பல்லவி பாடிய நான் , சென்ற வருஷம் பிரபல மருத்துவமனையில் நிகழ்ந்ததை சொல்கிறேன் அடுத்தப்பதிவில் ....
No comments:
Post a Comment