Monday 20 July 2015

திருமாலை -6 .

திருமாலை அறிவோம்...
சோழ நாட்டில் பிறந்தவர் ..தொண்டர்களின் பாதத்துளி , அடியொற்றி..சேவை செய்த விப்ர நாராயணர் நம் தொண்டரடிப்பொடியாழ்வார் ஆனார்..
அவர் பாடியவை..திருமாலை , திருப்பள்ளியெழுச்சி... ரெண்டுமே திருவரங்கம் வாழ் அரங்கன் மேல் எழுதியவை...
சிறிது இடைவெளி பிறகு..தொண்டரடிபொடியாழ்வரது திருமாலையை தொடர்கிறோம் ...
சற்றே.. மன்னித்து தொடரலாமா...



திருமாலை -6 .
மறஞ்சுவர்மதிளெடுத்து மறுமைக்கே வெறுமைப்பூண்டு
புறஞ்சுவரோட்டைமாடம் புரளும் போதறிய மாட்டீர்..
அறஞ்சுவராகி நின்ற அரங்கனார்க்காட்செய்யாதே
புறஞ்சுவர் கோலஞ்செய்து புட்கௌவக்கிடக்கின்றீரே ...
இனி பாசுரம் காண்போம்..
மறம் சுவர் மதிளெடுத்து - தீய செயல்களால் , எண்ணங்களால் ஆன சுவர் , மதிலாக எழுப்பி ...
மறுமைக்கே வெறுமைபூண்டு - மீண்டும் சரீரம் பெறா . வாழ்விற்கு தேவையான வற்றை பெறாமல்..வெறுமையைக்கொண்டு ..
புறம் சுவர் ஓட்டை மாடம் - வெளியே சுவராகதெரியும் நிலையில்லா உடல்
புரளும்போது அறிய மாட்டீர் - தரையில் விழும் காலத்தை அறிய மாட்டீர்கள்..
அறம் சுவர் ஆகி நின்ற - தர்மம் , அறத்தையே சரீரமாகக்கொண்ட
அரங்கனார்க்கு ஆட்செய்யதே - அரங்கனுக்கு அடிமையாக இல்லாமல்.
புறம் சுவ்ர் கோலம் செய்து - வெளியே தெரியும் சரீரத்தை அலங்கரித்து..
புள் கௌவக்கிடக்கின்றீரே - பறவைகள் கவ்விக்கொள்ளும் படி கிடக்கின்றீரே...
பாசுர விளக்கம்..
சாத்வீகமான , நல்ல குணங்களுடன் யாரும் நம்மை நெருங்கிட முடியாதபடி ,
தீய குணங்களால் ஒரு சுவர் எழுப்பிக்கொண்டு அதையே அரணாகக்கொண்டு ,
மீண்டும் பிறக்காதவண்ணம்... அவ்வுலக வாழ்க்கைக்கு தேவையான செல்வங்கள் (பக்தி) சேர்க்காமல் , வெளியே தெரியும் சரீரம்..உடலுக்கு...அலங்காரம் , ஆபரணங்கள் சேர்த்து செய்து கொள்கிறீரே...
அறமாகிய , தர்மத்தையே தனது சரீரமாக , உடலாகக்கொண்ட அரங்கனுக்கு சேவை செய்யாமல்..பக்தியுடன் இல்லாமல் இருப்பின்.. இவ்வுடல் இறந்ததும்..கீழே விழும்போது பறவைகள் கூட உண்ணாமல்..கவ்வியே பார்க்க..கிடக்கின்றீரே...
ஆழ்வார் .இங்கு..மனித வாழ்வில் , மறுமைக்காக நம் பால் உள்ள அன்பால் , கவலையுற்று , நம்மை விடுவிக்க , இப்பாசுரம் தருகிறார்..
வீணே அழியக்கூட வெளியே தெரியும் உடலுக்கு..வாசனை திரவியம் , ஆபரணங்கள் , உணவு என்று பார்க்கும் நாம் , மறு பிறப்பு இல்லாமல் செய்வதற்கான காரியங்களை செய்யாமல் , அரங்கனின் மேல் பக்திக்கொள்ளாமல் இருந்தால்..ஆத்மா பிரிந்து சரீரம் கீழே விழுந்தால்...பறவைகள் கூடகொத்தாமல்..கவ்விப்பார்க்கும்...ஆகையால் அத்தகைய இழிவான சரீரத்தை விட்டு , அரங்கன் மேல் பக்திக்கொண்டு..மறுமைக்கு வழி தேட சொல்கிறார்....
தொடர்ந்து அனுபவிப்போம்..அடுத்தடுத்து...

No comments:

Post a Comment