Monday 29 June 2015

தாத்தாவுக்கேத்த பேத்தி

அன்று விஷூ.. ஸ்கூல் early dispersal ..மறந்துட்டீங்களா, பரவாயில்லை ,நானே உங்க பொண்ணை கூட்டிட்டு வந்து விட்டுடறேன்னு , எனக்கு முன்னாடி,ஸ்கூல் பஸ் பிக்கப் பாயிண்ட் க்கு போன ப்ரெண்ட் போன்...நானும் சரின்னு சொல்லி வச்சிட்டேன்.
கேட்டுருந்த அம்மா, பஸ் சீக்கிரம் வருதா,சரி..அப்பாவும் போட்டும்..ந்னு சொல்ல, அப்பாவும் கிளம்பிப்போனார் பேத்தியை அழைச்சுட்டுவர.
கொஞ்ச நேரத்தில் சொன்னபடியே ப்ரெண்ட் பொண்ணை கூட்டிட்டு வந்து,விட்டுட்டு பேசிட்டு போய் விட, கூப்பிடபோன தாத்தாவை காணோம் !
"எங்கடி ,தாத்தா வந்தாரே ,உன்னக்கூப்பிடன்னேன், அவ,எனக்கு தெரியாதே", என பதற்றம் தொற்றிக்கொண்டது..எங்களுக்கு ..
ஒரு லிப்ட்ல் அப்பா கீழே செல்ல,இன்னொரு லிப்டில் பொண்ணு வந்துருக்கா,ப்ரெண்டோட!
அம்மா,பதட்டாமாய் ,என்ன ஆச்சுன்னு தெரிலயே ,அவர் வரலையே சொல்ல,பாட்டி வாங்க,நாம போய் பாக்கலாம்ன்னு கிளம்பினா என் பொண்ணு, போன வேகத்தில் ரெண்டு பேரும் திரும்பி வந்தாங்க ,அப்பா இல்லாமல் .
"என்னாச்சு,கீழ நல்லாப் பாத்தீங்களா , எங்கேயும் போயிடமாட்டார்ன்னு,சமாதான ப்படுத்திவிட்டு நா கேக்க,என் பொண்ணுதான்
ம்ம்..நல்லா தேடியாச்சுமா, எங்கயும் தாத்தாவக்காணோம் சொன்னதும் அம்மா கலவரமானார்.
இப்படிதான் காசியில் ஒரு தடவை கூட்டத்தில அப்பாவை மிஸ் பண்ணிட்டேன் ,அந்த மாதிரி எதாவது ஆகிருக்கும் கவலையோட அம்மா,பேச ஆரம்பிக்க ,அப்டியெல்லாம் இங்க ஆகாதும்மா,எங்கயும் போயிருக்கமாட்டார்ன்னு நா சமாதானம் சொல்ல, ஸ்ரீ வாங்க,பாட்டி திரும்ப போய் பாக்கலாம்ன்னு கூட்டிண்டு போனா!
இந்த முறை திரும்பி வரும் வந்தார்கள் அப்பாவுடன் ..பேசியபடியே,
அப்பா, வெயிலுக்காக பக்கத்துல இருந்த ரெஸ்டாரண்ட் வாசல் பக்கத்தில் நின்றிருந்தது ,கவனிக்கல முதல் தடவப்போனப்ப.
ரெண்டாம் தடவப் போயிட்டு, சுத்தி தேடிப்பாத்து கூட்டிட்டு வந்திருக்கா,பொண்ணு!
அப்பா," உன் பொண்ணு என்ன கேட்டா தெரியுமா "ந்னார் ,
நானும் என்னப்பா ங்க ,
" தாத்தா ,உங்கள யாராவது கிட்னாப் பண்ணிட்டுப் போயிட்டா , என்ன பண்ணுவீங்க,இப்படில்லாம் தனியா நிக்கலாமா"
" என்ன,ஏன் பண்ணப்போறாங்க,உன்னதான் ,சின்னப்பொண்ணு,பணத்துக்காக பண்ணலாம்"
" அச்சோ! இல்ல தாத்தா,இது எங்க ஊரு, என்னல்லாம் கிட் நாப் பண்ண மாட்டாங்க, ஆன உங்கள அப்டியில்லை , கூட்டிட்டுப்போயி
தலைய மொட்டையடிச்சு, பணத்துக்காக பிச்சையெடுக்கவச்சிடுவாங்க, அதனால் இனிமே கேர்புல்லா இருங்க" ந்னு சொன்னான்னு ,
சொல்லிட்டு வேற வேலை யெல்லாம் தர மாட்டாங்களாம்..பிச்சை எடுக்கவப்பாங்களாம்..சொல்லிட்டு
இந்த வயசு வரைக்கும் யாரும் என்ன இப்படி சொன்னதில்லன்னு
சொல்லிட்டு,அவர் மட்டுமில்ல,நாங்களும் நினைச்சு,நினைச்சு சிரிச்சுட்டேயிருந்தோம்...அன்னிக்கு முழுக்க...

No comments:

Post a Comment