Wednesday 17 June 2015

ரங்கா ..ரங்கா ...






அண்டசராசரங்களை
யும்
அடிகளால் அளந்து 
அயர்ந்து அறிதுயிலும் 
அரங்கா ! 

நின் பாதகமலங்களில்
சரண்புகுந்த சண்டியர்களுக்கும்
மோட்சமளிக்கும் பெருமானே !

விபீடணன் வேண்டியும் செல்லாமல் எம் வருத்தம் தீர கிடந்தருளும்
திருவருளே ! அரங்கமா நகருளானே!

நின் திரு உருத்தேடி விழிகள் விழிக்க
நாமம் பாடும் நாவும் தழுதழுக்க
நடக்க மறுக்கும் கால்கள் பின்ன

உயிரையே திரியாக்கி நின்
அருளோளி பெற அந்திமக்காலத்திலும் அந்தகன்
அச்சமின்றி திருவடி சேர்ந்திட அருள்போழி!!

அரங்கா! நின் திருக்கமல
சரணமன்றி யாதொன்றும் வேண்டேன் ! அருள்வாயா
அருட்கடலே!!அரங்கனே !!

No comments:

Post a Comment